
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கிடைப்பதற்கு அரிய மனிதப்பிறவி எடுத்திருக்கிறோம். அதனால், நம் வாழ்வின் நோக்கம் கடவுளை அறிவதாக இருக்கட்டும். 
* நல்ல சிந்தனைகளை கேட்டால் மட்டும் போதாது. அதை அன்றன்றே நடைமுறை படுத்த வேண்டும்.
* வாழ்வில் கஷ்ட நஷ்டங்களைத் தவிர்க்க முடியாது. அவற்றை மறந்து விடாமுயற்சியோடு உழைத்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.
* தளராத நம்பிக்கை, மனத்தூய்மை, தொண்டு மனப்பான்மை இந்த மூன்றும் நம்மிடம் இருந்தால் தான் கடவுளின் அருளை நாம் பெற முடியும். 
* பொறாமை ஒரு நஞ்சு. மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு ஒருபோதும் பொறாமைப்படுவது கூடாது. 
* அளவான பேச்சு, ஒருவரிடம் தெய்வ பலத்தை அதிகரிக்கச் செய்யும். சமூகத்தில் நன்மதிப்பை உண்டாக்கும். நினைவாற்றலை மேம்படுத்தும்.
* கடவுளின் திருநாமத்தை எப்போதும் மறவாது இருங்கள். நாள் முழுக்க நாமஜபத்தில் ஈடுபடுங்கள். 
- சாய்பாபா

